சுவிட்சர்லாந்திலுள்ள இரத்தினக்கல் நிறுவனமொன்றில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இஸ்ரேலியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
61 வயதான குறித்த சந்தேக நபர் கடந்த 2009ஆம் ஆண்டு ஜெனீவாவிலுள்ள இரத்தினக்கல் நிறுவனமொன்றில் 2.3 மில்லியன் பெறுமதியுடைய இரத்தினக்கற்களை கொள்ளையிட்டு தலைமறைவாகியிருந்ததாக நிறுவனத்தின் அதிகாரிகள் குற்றஞ்சுமத்தியிருந்தனர்;.
இந்நிலையில் குறித்த இஸ்ரேலிய பிரஜை சுவிட்சர்லாந்திலுள்ள அவரது தங்குமிடத்தில் வைத்து சுவிஸ் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர், நிறுவன உரிமையாளரை ஏமாற்றி இரத்தினக் கல்லை தாம் களவாடியதாக ஒப்புக் கொண்டுள்ளார். எனினும் களவாடப்பட்ட இரத்தினக் கல்லுக்கு என்னவாயிற்று என்பது தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியிடப்படவில்லை.
அத்துடன் சமபவத்துடன் தொடர்புடைய மேலும் ஒரு சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளதாக சுவிஸ் பொலிஸார் குறி;ப்பிட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள இஸரேலிய பிரஜை தங்கியிருந்த வீட்டில் தங்கியிருந்த பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கும் சம்பவத்துடன் தொடர்பு உள்ளதென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ள நிலையில் சுவிஸ் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை கைது செய்யப்பட்ட இஸ்ரேலிய பிரஜையை சுவிட்சர்லாந்து நீதிமன்றில் ஆஜர்படுத்துவதா அல்லது, இஸ்ரேலிய அரசாங்கத்திடம் ஒப்படைப்பதா என்பது குறித்து தற்போது பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.
| < முன் | பின் > |
|---|
- நல்லிணக்க ஆணைக்குழுவில் முப்படைத் தளபதிகள் சாட்சியமளிப்பு
- ஐ.தே.க. எம்.பி.கள் 6 பேர் அரசாங்க வரிசைக்கு மாறினர்:ஐ.தே.க. எம்.பிகளுக்கு சுதந்திரக்கட்சியின் அங்கத்துவம்
- லஞ்சம் வழங்கி பா.உறுப்பினர்கள் கொள்வனவு செய்யப்பட்டனர்
- கொக்கட்டிச்சோலையில் ஆயுதங்கள் மீட்பு
- பதாகை அச்சிட்டவர்களை காணவிவில்லை
- இராணுவப்புரட்சிக்கு அரசாங்கம் அழைப்பு விடுகிறது : சரத் பொன்சேகா
- ஹொண்டுராஸ் தொழிற்சாலையில் துப்பாக்கிப் பிரயோகம்: 18 பேர் பலி
- தற்கொலை படையை சேர்ந்தவரென்ற சந்தேகத்தில் செட்டிக்குளத்தில் யுவதி கைது
- இரு யாழ் பல்கலை. மாணவர் தகராறு கத்திக்குத்தில் முடிவு
- நடிகர் முரளி மாரடைப்பால் மரணம்





.jpg)










