பிரித்தானியாவிலிருந்து சுவிட்சர்லாந்து - ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையை நோக்கி மனிதநேய நடைப்பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தனின் கடினமான முயற்சி வெற்றிபெற வாழ்த்துவதுடன், தமிழ்மக்கள் அனைவரும், சிவந்தனுக்கு ஒருமித்த ஆதரவை வழங்க வேண்டுமென டென்மார்க் இளையோர் அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது 40 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் உயிர்கள் பறிக்கப்பட்டதுடன், பல்லாயிரக்கணக்கான மக்கள் ஊனமாக்கப்பட்டதோடு, 3 லட்சத்திற்கும் அதிகமான தமிழ் மக்கள் இடம்பெயர்ந்தனர் என டென்மார்க் இளையோர் அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூடி இருந்த உலகின் கண்கள் சற்றே திறப்பது போன்ற ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையின் சில நகர்வுகள் தென்படும் இவ்வேளையில் இலங்கை அரசு மீது சுயாதீன போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
வடகிலுள்ள தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் மற்றும் மனித உரிமைகள் மதிக்கப்படும் வரை இலங்கையைப் புறக்கணிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து பிரித்தானியாவிலிருந்து ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடைப்பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தனின் கடினமான இம் முயற்சி வெற்றிபெற வாழ்த்துத் தெரிவிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்மக்கள் அனைவரும், சிவந்தனுக்கு எமது ஒருமித்த ஆதரவை வழங்க வேண்டுமென டென்மார்க் இளையோர் அமைப்பு வேண்டி நிற்கின்றது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன், இன்று 6வது நாளாக தனது பயணத்தை அதே உற்சாகத்துடன் தொடர்ந்து வருகின்றார்.
இருப்பினும் அவரது காலில் அவ்வப்பொழுது வலி ஏற்படுவதை அவரது நடையில் இருந்து அவதானிக்க முடிவதாக அங்குள்ள உதவியாளர்கள் அறியத் தந்துள்ளனர்.
சிவந்தன் பரிஸ் நகரைச் சென்றடைய இன்னும் 230 கிலோமீற்றர்கள் இருப்பதுடன், அங்கிருந்து ஜெனீவா நோக்கி 600 கிலோமீற்றர்கள் நடந்து செல்ல வேண்டியுள்ளது.
- வெருகலம்பதி ஸ்ரீ முருகப் பெருமான் ஆலய உற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்பம்
- 10இலட்சம் பெறுமதியான சட்டவிரோத உரமூட்டைகள் களுவாஞ்சிகுடியில் பறிமுதல்
- அவுஸ்திரேலியாவின் புதிய நாடாளுமன்றம் 28 ஆம் திகதி கூடுகிறது
- இராணுவ நீதிமன்றம் மீது நம்பிக்கையில்லை : சரத் பொன்சேகா
- ஊடகங்களுக்கு மேர்வின் சில்வா எச்சரிக்கை
- துன்பத் தீயில் துவள்கின்றேன் : சிறையில் வாடும் சண்முகத்தின் கண்ணீர் மடல்
- கிழக்கில் யுத்தம் முடிந்து இதுவரை 95 பேர் காணாமல் போயுள்ளனர் : ததேகூ
- வல்லுறவுச் சம்பவங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமது கடமையைச் செய்வதற்கு ஐ. நா.தவறியுள்ளது
- இந்தியாவில் பஸ் விபத்து:22 பேர் பலி
- லக்ஷர் ஈ தொய்பா முகாம் குறித்து இந்தியாவிடம் தகவல் கோரியுள்ளது இலங்கை





.jpg)











