அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாடுகள் காரணமாக நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களும் செயலிழந்து போகும் நிலை உருவாகியுள்ளதாக விசனம் தெரிவித்திருக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி, இன்று பல்கலைக்கழக மாணவர்கள் மட்டுமன்றி விரிவுரையாளர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இது உயர் கல்வித்துறையில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் அச்சுறுத்தலுக்குள்ளாகி இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஐக்கிய தேசியக் கட்சி பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;

வெளிநாடுகளில் தொழில் புரியும் கல்விமான்கள்,புத்திஜீவிகளை நாடு திரும்பி சேவை புரியுமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உலகெங்கும் தொழில்புரியும் இலங்கையர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.

அவர் அப்படி அழைப்பு விடுக்கும் நிலையில் இன்று எமது நாட்டில் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் உக்கிரமடைந்து காணப்படுகின்றது.றுஹுணு பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

அரசாங்கம் எழுத்து மூலமும் வாய்மூலமாகவும் அளித்த வாக்குறுதிகளை உடன் நிறைவேற்றுமாறு வலியுறுத்தி பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் கடமைகளை பகிஷ்கரிக்கத் தொடங்கியுள்ளனர்.இதன் காரணமாக நாட்டின் பல்கலைக்கழகக் கட்டமைப்பே ஆட்டம் காணத் தொடங்கியுள்ளது.

பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ 2008 ஆம் ஆண்டில் வாக்குறுதியளித்திருந்தார்.ஆனால் இன்றுவரையில் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.

இது தொடர்பில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ,எஸ்.பி.திசாநாயக்க ஆகியோருடன் பேச்சுவார்த்தைகளை நடத்திய போதிலும் அதற்கும் பலன் கிட்டவில்லை.

பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்படுவது நியாயமானதென உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க அண்மையில் பாராளுமன்றத்தில் கூட தெரிவித்திருந்தார்.

தற்போது கடமையை பகிஷ்கரித்து வரும் விரிவுரையாளர்களின் நாளாந்த சம்பளத்தை வெட்டுவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

அரச ஊழியர்களுக்கு 2500 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குவதாக ஜனாதிபதி தேர்தலின் போதும் பொதுத்தேர்தலின் போதும் வாக்குறுதியளித்துவிட்டு இப்போது அந்த வாக்குறுதியையும் மீறியுள்ளார்.

இவ்வருடத்தில் 2500 ரூபா அதிகரிப்பதற்கு தம்மிடம் பணம் இல்லை எனக் கூறும் அரசு அடுத்த வருடத்தில் நிலுவைச் சம்பளத்துடன் வழங்கப்படும் எனக் கூறுவது கேலிக்கூத்தானதொன்றாகும்.

அரசாங்கம் அரச ஊழியர்களை மட்டுமன்றி பல்கலைக்கழக விரிவுரையாளர்களையும் ஏன் நாட்டு மக்களையும் ஏமாற்றியுள்ளமையும் தெளிவாகியுள்ளது.அரசாங்கம் பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் பிரச்சினைக்கு உடன் தீர்வுகாண முற்படாது போனால் இந்த விரிவுரையாளர்கள் பல்கலைக்கழக கட்டமைப்பிலிருந்து வெளியேறப் போவதாக அறிவித்துள்ளனர்.

அவ்வாறானதொரு நிலைமை ஏற்படுமானால் அனைத்துப் பல்கலைக்கழகங்களும் செயலிழந்து போகும் நிலை ஏற்படலாம்.இதனால் நாட்டின் கல்வித்துறை மோசமான நிலைக்குத் தள்ளப்படும் அச்சுறுத்தல் காணப்படுகின்றது.

இதற்கு அரசுதான் முழுப்பொறுப்பையும் ஏற்கவேண்டும்.பல்கலைக்கழக விரிவுரையாளர்களையும் மாணவர்களையும் வீதிக்கு இழுத்துவிட்டுத்தான் இலங்கையை ஆசியாவின் ஆச்சரிய பூமியாக மாற்றப்போகின்றதா அரசு எனக் கேட்க விரும்புகிறோம்.
 
  1. வெருகலம்பதி ஸ்ரீ முருகப் பெருமான் ஆலய உற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்பம்
  2. 10இலட்சம் பெறுமதியான சட்டவிரோத உரமூட்டைகள் களுவாஞ்சிகுடியில் பறிமுதல்
  3. அவுஸ்திரேலியாவின் புதிய நாடாளுமன்றம் 28 ஆம் திகதி கூடுகிறது
  4. இராணுவ நீதிமன்றம் மீது நம்பிக்கையில்லை : சரத் பொன்சேகா
  5. ஊடகங்களுக்கு மேர்வின் சில்வா எச்சரிக்கை
  6. துன்பத் தீயில் துவள்கின்றேன் : சிறையில் வாடும் சண்முகத்தின் கண்ணீர் மடல்
  7. கிழக்கில் யுத்தம் முடிந்து இதுவரை 95 பேர் காணாமல் போயுள்ளனர் : ததேகூ
  8. வல்லுறவுச் சம்பவங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமது கடமையைச் செய்வதற்கு ஐ. நா.தவறியுள்ளது
  9. இந்தியாவில் பஸ் விபத்து:22 பேர் பலி
  10. லக்ஷர் ஈ தொய்பா முகாம் குறித்து இந்தியாவிடம் தகவல் கோரியுள்ளது இலங்கை
Back to Top
சுவிஸ் செய்தி
News image

புலம்பெயர் தமிழர்கள் மூவரின் பயணம்

சுவிற்சலாந்தின் ஜெனிவாவில் அமைந்திருக்கும் ஐ.நா முன்றலில் இருந்து பெல்ஜியத்தின் தலைநகர் புருசல்ஸில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கிய புலம்பெயர் தமிழர்கள் மூவரின் பயணம் இன்று பத்தாவது நாளாகத் ...

Tuesday, 7 September 2010

விரிவு...
News image

சுவிஸில் இலங்கையைச் சேர்ந்த 24 குடும்பங்களுக்கு பிரஜாவுரிமை

சுவிஸில் இவ்வருடம் இலங்கைக் குடும்பங்களுக்கு 24 இற்கு பிரஜாவுரிமை கிடைத்துள்ளது. இப்பிரஜாவுரிமைக்கு 435 வெளிநாட்டுக் குடும்பங்கள் விண...

Saturday, 4 September 2010

விரிவு...
News image

சுவிட்சர்லாந்தின் தேசிய நாள்

சுவிட்சர்லாந்து நிலப்பகுதிகளாலும் ஆல்ப்ஸ் மலையாலும் சூழப்பட்ட மத்திய ஐரோப்பிய நாடு.

Sunday, 1 August 2010

விரிவு...
News image

இரத்தினக்கல் நிறுவனமொன்றில் திருட்டுச் சம்பவம் - இஸ்ரேலியர் ஒருவர் கைது

சுவிட்சர்லாந்திலுள்ள இரத்தினக்கல் நிறுவனமொன்றில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இஸ்ரேலியர் ஒருவர் கைது ...

Thursday, 29 July 2010

விரிவு...
-
+
1

உலகச் செய்தி
News image

அவுஸ்திரேலியாவின் புதிய நாடாளுமன்றம் 28 ஆம் திகதி கூடுகிறது

அவுஸ்திரேலியாவின் புதிய நாடாளுமன்றம் இந்த மாதம் 28 ஆம் திகதி முதல்த் தடவையாக  கூடவுள்ளது.

Thursday, 9 September 2010

விரிவு...
News image

வல்லுறவுச் சம்பவங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமது கடமையைச் செய்வதற்கு ஐ. நா.தவறியுள்ளது

கொங்கோ கிழக்கு ஜனநாயகக் குடியரசில்  இடம்பெற்ற பாரியளவிலான பாலியல் வல்லுறவுச் சம்பவங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமது கடமையைச் செய்வதற்கு  ஐக்கிய நாடுகள் சபையின் சமாதானப் பணியாளர்கள் தவறியுள்ளதாக ஐ.நா.வின் சிரேஷ்ட அதிகாரி அதுல் ஹா ...

Thursday, 9 September 2010

விரிவு...
News image

ஹொண்டுராஸ் தொழிற்சாலையில் துப்பாக்கிப் பிரயோகம்: 18 பேர் பலி

மத்திய அமெரிக்க நாடான ஹொண்டுராஸில் பாதணி தொழிற்சாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில்  18 பேர் கொல்லப்பட்டதுடன் மேலும் பலர் ...

Wednesday, 8 September 2010

விரிவு...
News image

ஆஸியில் அரசாங்கம் அமைப்பதற்கான பெரும்பான்மையை பெற்றார் கில்லார்ட்

அவுஸ்திரேலியாவில் அரசாங்கம் அமைப்பதற்குத் தேவையான நாடாளுமன்றப் பெரும்பான்மைப் பலத்தை பிரதமர் ஜூலியா கில்லார்ட் இன்று பெற்றுக்கொண்டுள்ளார்.

Tuesday, 7 September 2010

விரிவு...
-
+
1
இந்திய செய்திகள்
News image

இந்தியாவில் பஸ் விபத்து:22 பேர் பலி

இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் பஸ் ஒன்று ஆற்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22 பயணிகள் உயிரிழந்துள்ளனர்.

Thursday, 9 September 2010

விரிவு...
News image

நடிகர் முரளி மாரடைப்பால் மரணம்

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான முரளி தனது 46ஆவது வயதில் இன்று காலை உயிரிழந்துள்ளார்.

Wednesday, 8 September 2010

விரிவு...
News image

தெலுங்குதேசம் நிர்வாகிகள் கைது போலீஸ் நிலையம் முன்பு சந்திரபாபு நாயுடு போராட்டம்

ஆந்திராவில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் மருத்துவம், என்ஜினீயரிங் படிக்க முழு கல்வி செலவையும் அரசே ஏற்றுக்கொள்கிறது. இந்த திட்டத்தை ராஜசேகரரெட்டி கொண்டு ...

Tuesday, 7 September 2010

விரிவு...
News image

கவிஞர் வைரமுத்து மகன் கபிலன் வைரமுத்து திருமண விழா

கவிஞர் வைரமுத்து-பொன்மணி வைரமுத்து தம்பதியரின் இளைய மகனான கபிலன் மற்றும் திருச்சி மாவட்ட நீதிபதி எம்.மாயாண்டி, பேராசிரியை அமுதா ஆகியோரின் மகள் டாக்டர் ரம்யா ஆகியோருக்கு, சென்னை அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நேற்று திருமணம் ...

Monday, 6 September 2010

விரிவு...
-
+
1
பகிர்ந்துகொள்
Facebook MySpace Twitter Google Bookmarks RSS Feed 
விளையாட்டு செய்திகள்
News image

இலங்கை அணி சம்பியன்

தம்புள்ளையில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 74 ஓட்டங்களால் வெற்றி பெற்று சம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.

Sunday, 29 August 2010

விரிவு...
News image

சூராஜ் ரந்திவ், சேவாக்கிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார்

இலங்கை அணியின் பந்துவீச்சாளர் சூராஜ் ரந்திவ் இந்திய அணியின் ஆரம்ப வீரர் வீரேந்திர சேவாக்குக்கு நோ பால் வீசியதற்காக மன்னிப்புக் கேட்டுள்ளார்.

Tuesday, 17 August 2010

விரிவு...
News image

முரளி இல்லாமல் நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்நோக்கும் இலங்கைக் கிரிக்கெட்

உலகில் அதிகளவு விக்கெட்டுகளைப் பெற்று வரலாற்று நாயகனாக விளங்கும் முத்தையா முரளிதரன் இல்லாமல் நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்நோக்கும் புதிய கிரிக்கெட் சகாப்தத்திற்குள் இலங்கை நேற்று வெள்ளிக்கிழமை ...

Saturday, 24 July 2010

விரிவு...
News image

முரளிதரன் உலக சாதனை-முதல் டெஸ்ட்டில் இந்தியா தோல்வி

காலியில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் தனது 800வது விக்கெட்டை வீழ்த்தி புதிய சாதனை படைத்தார் முத்தையா முரளிதரன். இப்போட்டியில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை ...

Thursday, 22 July 2010

விரிவு...
-
+
1
முரசத்தின் தொடர்பு

+41 (0) 76 290 13 13

 info @ murasam.ch