தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ளும் முகமாக, ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 19ஆம் திகதி யாழ் குடாநாட்டிற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
இலங்கையின் கிழக்கு மாகாண சபையில் அம்பாறை மாவட்ட சபை உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு திடீரென விலக்கப்பட்டுள்ளதற்கு எதிராக மாகாண சபை அமர்வின்போது கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
சர்வதேச மட்டத்தில் இன்று எம்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு எதிர் வரும் பாராளுமன்ற தேர்தல் ஊடாக மக்கள் பதிலளிக்கவேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
இலங்கைத்தமிழர் தமது உரிமைகளை வென்றெடுப்பதற்கு இந்தியாவை நம்பியமை அவர்கள் செய்த மிகப்பெரும் தவறாகும் என்று இந்தியப்பேராசிரியர் அ.மார்க்ஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காக பிரிட்டிஷ் வெளிவவகார அமைச்சின் நிரந்தர பிரதிச்செயலாளர் ஸர்.பீட்டர் ரிக்கட்ஸ் இலங்கை வந்து சேர்ந்தார்.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, கிளிநொச்சி மாவட்டத்தில் கூடுதலான வாக்களிப்பு நிலையங்களை அமைப்பதற்கு தேர்தல் அதிகாரிகள் திட்டமிட்டு வருகின்றனர்.
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில், எந்தவித முன்னேற்றமும் காணப்படவில்லை என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் பான்கீமூன் சுட்டிக்காட்டியுள்ளார்.